யட்சி 19


Video Link Here

கீர்த்தனாவிடம் உண்மை எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் எனத் தோன்றியது. அவளிடம் எதையும் மறைப்பது நல்லதல்ல. ஏனென்றால், அவள் தான் யாமினி விஷயத்தில் எனக்கு உதவி செய்தாக வேண்டும்.

யட்சி 18 “அன்னைக்கு யாமினி கிட்ட நா பேசும் போது, அவ பாஸ்ட்ல நடந்ததயெல்லாம் சொன்னா ன்னு சொன்னேன்ல.”

“ஹ்ம்ம்.”

“அது வந்து..”

“அது என்னன்னு எனக்கும் தெரியும். வருண் கிட்ட கேட்டேன். எல்லாத்தையும் சொல்லிட்டான்.”

“அப்போ நல்லதா போச்சி. அந்த விஷயம் நடந்ததுல இருந்து லவ் னாலே வெறுப்பா இருக்குன்னு சொன்னா.”

“ஆமா. அப்டி ஒரு சம்பவம் நடந்தா யாரா இருந்தாலும் ஆம்பளைங்களையே வெறுப்பாங்க.”

“அவன் ஒருத்தன் பண்ண தப்புக்கு ஆம்பளைங்க எல்லாரையும் எதுக்கு வெறுக்கணும்?”

“வெறுக்காம என்ன பண்ணுவாங்க? அவங்க அக்காவ அவ கண் முன்னாலயே ரேப் பண்ணி கொன்னா அத நேர்ல பாத்த அவளுக்கு எப்டி இருக்கும்?”

“நீ என்ன சொல்ற? ரேப் பண்ணி கொன்னாங்களா?”

“ஆமா. அவ உன்கிட்ட சொல்லலையா?”

“அவ என்கிட்ட அதெல்லாம் பத்தி சொல்லல. கொன்னுட்டாங்கன்னு தான் சொன்னா. உண்மையிலேயே அங்க என்ன நடந்திச்சு? சொல்லு.”

“காலேஜ் முடிஞ்சி யாமினி அக்காவுக்காக செக்யூரிட்டி ரூம்ல காத்துட்டு இருக்கும் போது, அந்த சைக்கோ இன்னும் ரெண்டு ப்ரெண்ட்ஸோட வந்திருக்கான். அதுல ஒருத்தன் வீடியோ பண்ண, இன்னொருத்தன் யாமினிய பிடிக்க அந்த சைக்கோ அங்க இருந்த கயிற எடுத்து கைய காலையெல்லாம் கட்டிவச்சி அவள ரேப் பண்ண ரெடியாகி இருக்கான். அப்போ தான் அவங்க அக்கா உள்ள வந்து அங்க இருந்த ஒரு இரும்பு ராட எடுத்து அவங்க மூணு பேரையும் அடி அடின்னு அடிச்சிருக்கா. செம்மையா அடி விழுந்த கோபத்துல அந்த இரும்பு ராட அவகிட்ட இருந்து புடிங்கி எடுத்து அவள திருப்பி அடிச்சிருக்காங்க. அப்புறம் அவ முடியாம கீழ விழ இன்னும் கோபம் அடங்காம அந்த மூணு பேரும் அவள யாமினி கண் முன்னாலேயே கதறக் கதற ரேப் பண்ணி இருக்காங்க. அப்புறம் அந்த சைக்கோ யாமினியையும் ரேப் பண்ண ட்ரை பண்ணி இருக்கான். நல்ல வேளையா அந்த டைம் பாத்து செக்யூரிட்டி அங்கிள் திரும்ப வந்து ரெண்டு பேரையும் அவங்ககிட்ட இருந்து காப்பாத்தி இருக்காரு. ஆனா, தலைல ஹெவியா அடி பட்டிருந்ததனால ஹாஸ்பிடல் கொண்டு போனதுக்கு அப்புறமா கூட யாழினி அக்காவ காப்பாத்த முடியலயாம். அதுக்கப்புறம், அந்த மூணு பேரையுமே போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டிருக்காங்கலாம். இந்த செய்தி அந்த நேரம் டீவில, பேஸ்புக்ல, நியூஸ் பேப்பர்ல ன்னு ரொம்ப வைரலா இருந்திருக்கு. நமக்குத் தான் எதுவுமே தெரியல.”

கீர்த்தனா கூறி முடித்ததும் எனக்கு தலையெல்லாம் சுற்ற ஆரம்பித்தது. இப்படி ஒரு கசப்பான சம்பவத்திலிருந்து வெளியே வருவது என்பது யாருக்குமே முடியாத ஒரு காரியம் தான்.

நான் கவலையுடன் பக்கத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். கீர்த்தனா தொடர்ந்தாள்.

“நீ அவகிட்ட லவ்வ சொல்லும் போது இதெல்லாம் நடந்து முடிஞ்சு ஒரு 5 மாசம் கூட ஆகி இருக்காது.”

“ஹ்ம்ம்”

“அந்த டைம்ல அவ எப்டி உன்னோட காதல ஏத்துக்குவா?”

“ஹ்ம்ம். நா பண்ணது தப்புத்தான். எனக்கு என்ன தெரியும் அவ லைஃப்ல நடந்தது பத்தி? ஆனாலும், நா அதுக்கு அவகிட்ட சாரி சொல்லிட்டேன்.”

“அது சரி. அப்புறம் எதுக்கு உன்னமாதிரி ஆளுங்க கூட பேசுறதே பெரிய விஷயம் ன்னு கோபமா சொன்னா?”

“அது வந்து..”

“இழுக்காம சொல்லு”

“அன்னைக்கு… கார்ல… அவள நா…. கிஸ் பண்ணிட்டேன்.”

“என்னடா சொல்ற? லூஸு”

“ஆமா.”

“எதுக்கு கிஸ் பண்ண?”

“அவ பழசயெல்லாம் மறக்க முடியலன்னு சொன்னா. நைட்ல அது பத்தின நினைப்பு வராம ஒரு நாளும் தூங்குனதே இல்லையாம்.”

“அதுக்கு?”

“விக்கல் வந்தா ஏதாச்சும் அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்தா விக்கல் நின்னுடும்ல! அது மாதிரி நைட்ல அது பத்தின நினைப்பு வராம இருக்க நா அப்டி பண்ணேன்.”

“அப்டி பண்ணா?”

“நைட் தூங்கும் போது பழைய ஞாபகங்களுக்குப் பதிலா இனிமே நா கிஸ் பண்ணது தான் ஞாபகம் வரும்.”

“லூசாடா நீ? அப்டி பண்ணா இப்டி நடக்கும் னு யார் சொன்னாங்க?”

“யாரும் சொல்லல. நானா தான் அப்டி நினைச்சி பண்ணேன்.”

“ஆமா. பெரிய சைக்கோலஜிஸ்ட் இவரு! அட பைத்தியமே. அவ இஷ்டம் இல்லாம நீ அப்டி பண்ணா, நீயும் அவ அக்காவ கொல பண்ணுன அந்த சைக்கோ மாதிரின்னு தான் நினச்சி இருப்பா. இப்ப அவன் இடத்துல தான் நீயும் இருப்ப. லூஸு.”

“என்னடி சொல்ற?”

“ஆமா. அதனால தான் அவ அப்டி கோபமா பேசி இருக்கா.”

“இப்ப என்னடி பண்றது? அவ அன்னைல இருந்து என்கிட்ட பேசவே இல்ல. சோகமாவே இருக்கா.”

“ஒழுங்கா மரியாதையா போய் அவகிட்ட மன்னிப்புக் கேளு. அவ மன்னிக்கலன்னா கால்லயாச்சும் விழுந்து மன்னிப்புக் கேளு.”

“ஹ்ம்ம்.”

“ஆனா எல்லா விஷயமும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கொள்ளாத. தெரிஞ்சா வருணத் தான் திட்டுவா.”

“ஹ்ம்ம்.”

நான் அவளிடம் மன்னிப்புக் கேட்க தயாரானேன். அவள் ரூமில் தனியாக இருந்த நேரம் பார்த்து நான் அவளருகில் சென்றேன்.

“யாமினி”

அவள் எதுவுமே பேசாமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.

“ப்ளீஸ் யாமினி. என்கிட்ட பேசுங்க.”

“…………..”

“நா பண்ணது ரொம்பப் பெரிய தப்பு. தயவுசெஞ்சு என்ன மன்னிச்சிடுங்க யாமினி. ப்ளீஸ்.”

“…………..”

“ஐ ஆம் வெரி வெரி வெரி சாரி யாமினி. ப்ளீஸ்”

“…………..”

“இடியட் மாதிரி யோசிச்சி இப்டி ஒரு தப்ப பண்ணிட்டேன் யாமினி. தயவு செஞ்சி என்ன மன்னிச்சிடுங்க. உங்க பாஸ்ட்ல உண்மையிலேயே என்ன நடந்திச்சிதுன்னு இன்டர்நெட்ல தேடிப் பாத்து தெரிஞ்சிகிட்டேன். உடனே உங்களுக்கு நா பண்ணது எவ்வளவு வலிச்சிருக்கும்னு புரிஞ்சிது. அதுக்காக உங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கத்தான் இப்ப நா இங்க வந்திருக்கேன்.”

அவள் போனை பக்கத்தில் வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.

“அன்னைக்கு என்ன நடந்துதுன்னு முழுசா நா உங்ககிட்ட சொல்லல தான். ஆனா அவன் என்ன ஃபோர்ஸ் பண்ணி கிஸ் பண்ணான் னு உங்ககிட்ட சொன்னேன் தானே. அதுகப்புறம் கூட உங்களுக்கு என்ன அப்டி பண்ண தோணி இருக்குன்னா உங்களுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்?”

“அது வந்து…. ஏதோ ஒரு மக்குத்தனமான யோசனைல அப்டி பண்ணிட்டேன். ஐம் சாரி”

“சரி ஓகே. விடுங்க. இனிமேலாச்சும் பொண்ணுங்க உணர்வுகளுக்கும் கொஞ்சம் மதிப்புக் குடுங்க.”

“சாரி யாமினி. என்ன மன்னிச்சிடுங்க. ப்ளீஸ்.”

“நோ. இத நா எப்பவுமே மன்னிக்கவே மாட்டேன். எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணி இருக்குன்னு தெரிஞ்சும் கூட நீங்க இப்டி பண்ணத என்னால மன்னிக்கவே முடியாது. இது விக்ரமுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?”

அவள் விக்ரம் பத்தி சொன்னதும் எனக்கு ரொம்பவே எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு,

“அது எனக்கும் உங்களுக்கும் உள்ள நடந்த விஷயம். வேற யாருக்குமே தெரியாது. தயவு செஞ்சி அவர்கிட்ட இதெல்லாம் பத்தி சொல்லிடாதீங்க.”

“நா எதுக்கு சொல்லப் போறேன். சும்மாவே அவருக்கு உங்ககூட டூர் வந்தது பிடிக்கல. இதையும் சொல்லி அவர கோபப்பட வைக்க எனக்கென்ன பைத்தியமா என்ன?”

“ஓஹ். கல்யாணத்துக்கு ஓகே சொல்லி ஒரு நாள்லயே அவரு அதெல்லாம் சொன்னாரா உங்ககிட்ட? நீங்க இத என்கிட்ட அன்னைக்கே சொல்லி இருந்தா உங்களையும் அவர் கூடவே அனுப்பி வச்சிருப்பேன். இல்லன்னா கார் சாவிய உங்க தம்பிக்கிட்ட குடுத்துட்டு நா மட்டும் தனியா ட்ரைன்லயோ பஸ்லயோ ஊருக்கு கிளம்பி இருப்பேன். அட்டப் பூச்சி உங்கள கடிச்சப்போ கூட எதுவுமே பண்ணாம சும்மா இருந்திருப்பேன்.”

அவள் அமைதியாக இருந்தாள். நான் தொடர்ந்தேன்.

“உங்க பாஸ்ட் பத்தி விக்ரமுக்கு தெரியுமா?”

“இல்ல. ஏன்?”

“ஏன் சொல்லல?”

“ஜஸ்ட் சொல்லல.”

“அவரும் ஒரு வேள என்ன மாதிரி இன்டெர்நெட்ல பாத்து தெரிஞ்சிகிட்டார்ன்னா என்ன பண்ணுவீங்க?”

“தெரியல.”

“கல்யாணம் பண்ணிக்கப் போறீங்கன்னா எப்டியும் உங்கள பத்தின எல்லாத்தையுமே சொல்லித்தானே ஆகணும். இதையும் முழுசா அவர்கிட்ட சொல்லிடுங்க.”

“எதுக்கு சொல்லணும்?”

“சொல்லிப் பாருங்க. அப்புறம் அவரோட ரியாக்ஷன் எப்டி இருக்குன்னு பாக்கலாம்.”

“அப்புறம் பாக்கலாம்.”

அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது விக்னேஷும் வருணும் வந்து விட்டார்கள். விக்னேஷ் என்னை தனியாக அழைத்துச் சென்று, வருணை வெளியே கூட்டிச் செல்ல சொன்னதன் காரணம் என்னவென கேட்டான். நானும் அவனுக்கு நடந்ததையெல்லாம் கூறினேன். பின்னர், எல்லோரும் ஒன்றாக அமர்ந்து டின்னர் சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருக்க, விக்னேஷ் அவர்களது வயலுக்குக் காவல் இருக்கப் போவதாகக் கூறி புறப்பட ஆயத்தம் ஆனான். எனக்கும் அவனுடன் காவலுக்குச் செல்ல ஆசையாக இருந்தாலும், அதனை அவன் விரும்பவில்லை.

“நீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க. நேரத்தோட படுத்துத் தூங்குங்க. அங்க வந்தா ஒரு நிமிஷம் கூட உங்களால தூங்க முடியாது. கொட்டில்ல ஒருத்தர் படுக்குற அளவுக்குத் தான் இடம் இருக்கு.”
என்றான்.

நானும் சரியென்று இருக்க, அவன் கிளம்ப முன்னர் ரகசியமாக என்னிடம் வந்து ஒரு பீர் போத்தலை தந்து,
“பழக்கம் இருக்கா?” என்றான்.

“ஹ்ம்ம்.”

“அப்ப ஓகே. ஒரு ஓரமா போய் அடிச்சிட்டு நைசா போய் தூங்கிடுங்க.” என்றான்.

நானும் சரியென அதனை வாங்கி காரில் வைத்துவிட்டு, வீட்டின் ஓரமாக இருட்டில் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றேன். அவர்களது வீட்டில் இரண்டு ரூம்கள் தான் இருந்தன. யாமினியும் கீர்த்தனாவும் லாவண்யாவுடன் அவளது ரூமில் படுத்துக்கொண்டனர். அம்மா சித்தியுடன் அவளது ரூமில் படுத்துக்கொள்ள, என்னையும் வருணையும் ஹாலில் படுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சித்தப்பா வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டார்.

யாமினி பற்றிய நினைவுகள் ஒரு பக்கம், விக்ரமை எப்படி அவளை விட்டு விலக வைக்கலாம் என்ற யோசனைகள் ஒரு பக்கம், யாமினியை எப்படி கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற யோசனைகள் ஒரு பக்கம் என தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.

நேரம் 12 மணி தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. நான் வருணைப் பார்த்தேன். அவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அப்பொழுது எனக்கு விக்னேஷ் தந்துவிட்டுப் போன பீர் போத்தல் ஞாபகத்துக்கு வர, தூக்கமும் வராத காரணத்தினால் நான் மெல்ல எழுந்து கதவினைத் திறந்தேன். சித்தப்பாவும் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்க, நான் வீட்டின் ஓரத்தில் பார்க் செய்து வைத்திருந்த காரினுள் ஏறிக்கொண்டேன்.

அந்த பீர் போத்தலை முழுமையாக குடித்து முடித்துவிட்டு, வெளியே சென்று நன்றாக சிறுநீரும் கழித்துவிட்டு வந்து நான் காரிலேயே பின் சீட்டில் கொஞ்சம் மடிந்து படுத்தபடி தூங்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச நேரத்தில் என்னை யாரோ கூப்பிடுவது போலவும் பிடித்து உழுப்புவது போலவும் இருக்க லேசாக கண் விழித்தேன். கீர்த்தனா தான் வந்து காரின் கதவினை திறந்து என்னைக் கூப்பிட்டபடி காலைப் பிடித்து உழுப்பிக் கொண்டிருந்தாள். சித்தப்பாவுக்கு கேட்காமல் மெல்லிய குரலில் கூப்பிட்டபடி என்னை உழுப்பிக் கொண்டிருந்தாள். எனக்கு அன்றைய கொடைக்கானல் இரவு ஞாபகத்திற்கு வர, நான் எதுவுமே பேசாமல் போதையில் தூங்குவது போல நடித்தேன். அவள் உள்ளே ஏறி அமர்ந்துகொண்டு எனது அருகில் வந்து எனது வாயை முகர்ந்து பார்த்தாள். நான் குடித்ததிருப்பதனை உணர்ந்து கொண்டு மீண்டும் எழுந்தாள். அவளது முலைகள் லேசாக என் மீது உரச உடனடியாக எனது ஆண்குறி விழித்துக் கொண்டது.

தொடரும்…

Mail & Gchat:
[email protected]

6729710cookie-checkயட்சி 19