யட்சி 7 – Tamil Sex Stories


Video Link Here

எனக்குள் தோன்றிய உணர்வுகள் போல கீர்த்தனாவுக்கும் ஏதாவது தோன்றி இருக்குமா என எனக்குத் தெரியவில்லை. சட்டென மாறிய எனது ஆண்மையின் கோலின் வீரியத்தினை அவள் ஒரு வேளை உணர்ந்திருப்பாளா என்றும் தெரியவில்லை. அப்படி ஒரு வேளை உணர்ந்திருந்தால், அவள் என்னைப் பற்றி ஏதாவது தப்பாக நினைத்திருக்கவும் கூடும்.

ஆனால், அவளைக் கட்டிப் பிடிப்பது, நெற்றியில் முத்தமிடுவது எல்லாம் அவள் மேல் இருக்கும் அன்பினால் மட்டும் தான். சிறு வயதில் இருந்தே எனக்கும் அவளுக்குமான உறவு முறை அப்படித்தான் இருந்து வருகிறது.
ஆனாலும், ஏனோ தெரியவில்லை நீண்ட இடைவெளியின் பின்னர் அவளை அணைக்கும் பொழுது ஏதோ ஒன்று எனக்குள் வித்தியாசமாக நிகழ்கிறது. வயசு காரணமா இல்லையென்றால் அவளது உடம்பின் வளர்ச்சிகள் காரணமா என எதுவும் எனக்குப் புரியவில்லை. ஆனாலும், மனதுகுத்தான் அவள் தங்கை. உடம்புக்கு இல்லையே. அதற்குத் தேவை எல்லாம் இன்னொரு எதிர்ப்பாலின உடம்பு. அப்படி ஒரு உடம்பு கிடைத்தால் போதும். மற்றவை எல்லாமே பாஸ்வேர்ட் இல்லாத வைஃபை போல அதுவாகவே கனெக்ட் ஆகும். அவ்வளவு தான்.

அவள் வளர்ந்து விட்டாள். இனிமேல் அதற்குரிய கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நானும் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

பயணத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் காரில் எடுத்து வைத்துவிட்டு நான் தனியாக காரில் அமர்ந்திருந்தேன்.

யாமினியின் வீட்டிலும் லைட்டுக்கள் எரிந்துகொண்டிருந்தன. யாமினியும் வருவது உறுதியாகி விட்டதாகையால் எனக்கு ரொம்பவே கடுப்பாக இருந்தது. தனது பிடிவாதத்தினால் எப்படியோ யாமினியையும் டூரில் சேர்த்துக் கொண்டாள் அந்தக் கிராதகி கீர்த்தனா.

எவள் வந்தாலும் பரவாயில்லை. என்னுடைய மனது எனது கண்ட்ரோலிலேயே இருக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளை பார்ப்பதோ ரசிப்பதோ கூடாது. முடிந்தளவுக்கு அவளை விட்டு தூரமாகி இருந்து இந்த நாட்களை கழித்துவிட்டு வீடு வந்து சேர வேண்டும் என்று பல நூறு திடசங்கற்பங்கள் எடுத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் அவளது வீட்டின் வெளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்க, நான் திரும்பிப் பார்த்தேன்.

பேரழகுப் பெட்டகமாக அந்த யட்சி நடந்து வந்து கொண்டிருந்தாள்.
மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள். மெல்லிய பச்சை நிறத்தில் ஸ்ட்ரெச் பாண்ட்டும், துப்பட்டாவும் அணிந்திருந்தாள். அவளது மேனியின் நிறம் சுடிதாரின் மஞ்சள், பச்சை நிற காம்பினேஷனுடன் சேர்ந்து வேறு விதமான ஒரு அழகினை அவளுக்கு வழங்கிக்கொண்டிருந்தது.

அவளுக்குப் பின்னால் அவளது அப்பாவும் அம்மாவும் தம்பியும் லெக்கேஜ்களை தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். நான் உடனே காரில் இருந்து இறங்கி டிக்கியை திறந்து விட்டேன். அதில் அவர்கள் லெக்கேஜ்களை அடுக்கிக் கொண்டிருக்க, அவளைப் பார்க்கவும் முடியாமல் பார்க்காமல் இருக்கவும் முடியாமல் நானோ தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன்.

அவள் கைகளில் ஆயுதங்கள் இல்லை. என்னைத் தொடவும் இல்லை. ஆனாலும் என் இதயத்தினை அரிந்து கூறு போட்டுக் கொண்டிருந்தாள். அது சரி. யட்சிகளுக்கு ஆயுதங்கள் எதற்கு?

“நல்ல கார். என்ன மாடல் இது?”
என்று யாமினியின் அப்பா பேச்சை ஆரம்பிக்கவும் தான் நான் கொஞ்சம் சுய நினைவுக்கு வந்தேன்.

“இது சுசூகி பலீனோ அங்கிள்.”

“ஹ்ம்ம். குட். நைஸ் ஒன். நல்ல பெரிய கார் தான்.”

“ஆமா அங்கிள். இந்த மாதிரி ஒரு கார் எடுக்கணும் னு எனக்கும் ஆச இருக்கு. அதனால தான் இதையே கொண்டு வந்தேன் டூர் க்கு.”

“ஹ்ம்ம். குட் குட். வெரி குட்.”

யாமினி காரை கொஞ்சம் நோட்டமிட்டாள்.

“என்ன அங்கிள்? யாமினி வரலன்னு சொன்னா? இப்ப முதல் ஆளா ரெடியாகின்னு வந்து நிக்குறா?”

நான் கேட்டதும் அங்கிள் சிரிக்க, யாமினி என்னைப் பார்த்து முறைத்தபடி,
“ஹா. எல்லாம் உங்க தொங்கச்சியால தான்.” என்றாள் கடுப்புடன்.

“அது என்னன்னா, இவ இல்லாம அவளுக்கு இருக்க முடியாது. அவ இல்லாம இவளாலேயும் இருக்க முடியாது. அதனால தான் இப்படி.”என்று கூறி சிரித்தார் யாமினியின் அம்மா.

பின்னர் யாமினியும் வருணும் அவர்களது அம்மாவும் எங்கள் வீட்டிற்குள் நுழைய, யாமினியின் அப்பா எனக்கு நீர்வீழ்ச்சிகளிலும் ஆறுகளிலும் நடந்து கொள்ளும் முறைகள் முதற்கொண்டு நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவது எப்படி என்ற வரை அறிவுரைகள் பலவற்றை காது கடுக்கும் அளவுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்.

பெற்ற பிள்ளைகள் மீது இருக்கும் கரிசனை அது. என்னதான் பண்ண? எல்லாவற்றையும் “ஓகே அங்கிள் சரி அங்கிள்” என்றவாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.

நேரம் அதிகாலை 4 மணியினைத் தொட்டுக்கொண்டிருந்தது. ஒரு வழியாக எல்லாரும் வந்து சேர, எங்கள் பயணம் இனிதே ஆரம்பமானது.

வருண் எனக்குப் பக்கத்தில் முன் சீட்டில் அமர்ந்துகொள்ள பின் சீட்டில் அம்மாவும் கீர்த்தனாவும் யாமினியும் அமர்ந்து கொண்டனர்.

பயணம் ஆரம்பித்து சற்று நேரத்தில், “பாட்டு ஏதாச்சும் போடவாண்ணா?”
என்று கேட்டான் வருண்.

“அதுக்கென்ன! போடு” என்றேன்.

ஏற்கனவே நான் டூருக்கு என எனக்குப் பிடித்த குத்துப் பாடல்களையும் காதல் பாடல்களையும் போனில் ஒரு பிளேலிஸ்டாக செய்து வைத்திருந்தேன். ஆனால், யாமினியும் கூட வருவதனால், காதல் பாடல்கள் கேட்கும் பொழுது நான் இன்னும் உடைந்து விடுவேன் என்பதனாலும், ஒரு வேளை நான் அவளை இம்ப்ரெஸ் பண்ணுவதற்காக இப்படியெல்லாம் பாட்டு போடுகிறேன் என அவள் நினைத்துவிடக்கூடும் என்பதனாலும் அது வேண்டாம் என்று தோன்றியது.

வருண் ‘அட்றாட்றா நாக்குமுக்கா’ ரேஞ்சுக்கு பாடல்களை போட்டுவிட கொஞ்ச நேரத்தில் யாமினி மூட்அவுட் ஆனாள்.

“என்ன பாட்டுடா போடற? இந்த நேரத்துல நல்ல மெலோடி சாங்ஸ் கேட்டா தான் நல்லா இருக்கும்.” என்றாள்.

“அதானே. கொஞ்சம் தெய்வீகமா ஆரம்பிக்கலாமே.” என்றாள் கீர்த்தனா.

“சரி சரி. நல்ல சாங்ஸ் போடறேன். வெயிட்.” என்றவாறு போனை எடுத்து இளையராஜா சாங்ஸ் லிஸ்டினை பிளே செய்தான் வருண்.

“செம்பருத்தி செம்பருத்தி பூவ போல பெண்னொருத்தி…….” என்று ஆரம்பித்தது அவனது பிளேலிஸ்ட்.

“ப்ப்பா.. செம்ம சோங். இந்த மாதிரி சாங்ஸ் கூட கேப்பியா நீ?” என்றேன்.

“கேப்பனாவா? மோஸ்ட்லி நா கேக்குறதே இளையராஜா சாங்ஸ் தான்ணா.” என்றான் பெருமையாக.

“ஓகே. ஓகே. கீப் இட் அப்.” என்று சொல்லிவிட்டு நான் பாதையில் கவனத்தினை செலுத்தினேன்.

வருண் போனில் இருந்து வந்த ஒவ்வொரு பாடல்களும் என்னையும் என் இதயத்தினையும் கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தன.

இந்த மாதிரியான ஒரு இரவு நேரப் பயணத்தில் தனது விருப்பத்திற்குரிய காதலி பக்கத்திலேயே இருக்கும் பொழுது பாடல்களில் வரும் ஒவ்வொரு வரியாக அவளை அதனோடு ஒன்றிணைத்து, ஒப்பிட்டுப் பார்த்து ரசித்து மகிழ்வடையும் காதலர்கள் மத்தியில் நான் மாத்திரம் அந்தப் பாடல்களையும் வரிகளையும் கேட்டு இதயம் உடைந்து உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டிருந்தேன்.

என்னால் எதுவுமே பேச முடியவில்லை. அமைதியாக காரினை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

இருள் கொஞ்சம் கொஞ்சமாக கரைய, வானம் கொஞ்சம் கொஞ்சமாக விடிந்து கொண்டிருந்தது.

காரினுள்ளும் வெளிச்சம் கொஞ்சம் பரவ, நான் ரியர் வியூ கண்ணாடியில் பின்னால் பார்த்தேன். மூவருமே நல்ல தூக்கம். யாமினி கீர்த்தனாவின் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்க, கீர்த்தனா அவளது தலையில் சாய்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள்.

மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும், எத்தனை எத்தனை திடசங்கற்பங்கள் நான் பூண்டிருந்தாலும் கூட, என்னையும் அறியாமல் இடையிடையே அவளைக் கண்ணாடியில் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டே வாகனத்தினை செலுத்திக் கொண்டிருந்தேன்.

பயணத்தின் இடையினில்,
சில பாடல்களை ரசித்து தலையாட்டி இதழ்களை மட்டும் அசைத்து மனதுக்குள் பாடுவதையும், கீர்த்தனாவுடன் செல்லச் சண்டைகள் சில போடுவதையும், அம்மாவுடன் மரியாதையாகவும் குழந்தைத் தனமாகவும் நடப்பதனையும் , சில சமயங்களில் தம்பி வருணை அழகாகக் கண்டிக்கும் விதங்களையும், ஹோட்டல்களில் அமர முன்னர் சுத்தமான நாற்காலியினைக் கூட டிஸ்ஸு பேப்பர் எடுத்து சுத்தம் செய்வதனையும், சாப்பிடுவதற்கு முன்னர் மெனக்கெட்டு கைகளை நிமிடக் கணக்கில் சுத்தம் செய்வதனையும், சாப்பிடும் பொழுது அவளது இதழ் அசைவுகளையும், தலையினை ஆட்டி ஆட்டிப் பேசும் பொழுது அடிக்கடி அவளது முகத்தினில் வந்து விழும் கூந்தல் முடிகளையும், அதனைக் கோதி காதின் இடையினில் சொருகும் அழகினையும், புகைப்படங்கள் எடுக்கும் பொழுது அவள் கொடுக்கும் அழகான போஸ்களையும், பொது இடங்களில் குழந்தைகளைக் கண்டால் அவள் கொடுக்கும் முக பாவனைகளையும், வெளியில் நடக்கும் பொழுது கீர்த்தனாவின் கைகளைப் பிடித்து ஜோடி போட்டு நடந்து செல்வதனையும் நான் அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தேன்.

“அப்போ அந்த திடசங்கற்பங்கள்?”

“அது கிடக்குது கழுதை. இவள் அழகினை ஒரு நொடி ரசிக்க ஆயிரம் சோடிக் கண்கள் வேண்டும். நமக்கு இருப்பதோ ஒரே ஒரு சோடிக் கண்கள் தான். ஒரு நொடியில் ஆயிரம் தடவைகள் அவளை ரசிப்பதனை விட்டு விட்டு திடசங்கற்பமும் மயிரும் மண்ணாங்கட்டியும் தான்.”

மூளையும் இதயமும் சண்டைகள் பல போட்டுக் கொண்டன.

ஆனாலும், அவளை ரசிப்பதனைத் தவிர நான் அவளுடன் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பேசத் தோணவும் இல்லை. அவளே வந்து பேசினால் நாமும் பேசலாம் என நினைத்துக் கொண்டேன்.

இடையில் ஒரு அழகான விவசாயக் கிராமம். அதில் பாதை ஓரத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு
அழகான ஒரு பெரிய குளம்.

அதில் ஒவ்வொரு இடத்திலும் குளிக்க ஏதுவான இடங்களில் ஆண்களும் பெண்களுமாக குளித்துக் கொண்டிருக்க, எனக்கும் அதில் குளிக்கலாம் என ஒரு ஆசை பிறந்தது. நான் காரை ஒரு பெரிய மரத்தின் கீழ் நிறுத்தினேன்.

“என்னண்ணா? குளிக்கப் போறோமா?” என்றாள் கீர்த்தனா.

“ஆமா.”

“யெஸ். செம்ம” என்றவாறு அம்மாவைப் பார்த்தாள் கீர்த்தனா.

ஆனால், அந்த இடம் அக்கம் பக்கம் பற்றி எதுவுமே தெரியாது என்பதனால் அம்மா அவளுக்கு அனுமதி வழங்கவில்லை. “கொடைக்கானல் போனதும் பார்த்துக்கலாம்” என்று கூறி மறுத்துவிட்டார்.

நானும் வருணும் ஷார்ட்ஸினை அணிந்து கொண்டு குளத்தினில் பாய, கீர்த்தனாவும் யாமினியும் ஆசையுடன் கரையில் இருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அம்மா காரில் இருந்து இறங்கி வீதியில் போன அந்தக் கிராமப்புறப் பெண்கள் இருவரைப் பிடித்து ஏதோ கதை பேசிக்கொண்டு இருந்தார்.

கீர்த்தனாவுக்கு அந்தக் குளத்தில் குளிக்கும் ஆசை மேலும் மேலும் அதிகரிக்க கையில் இருந்த பொருட்களையும் துப்பட்டாவையும் யாமினியிடம் கொடுத்துவிட்டு சுடிதாருடனேயே சட்டென குளத்தினுள் பாய்ந்தாள்.

அம்மாவுக்கு கோபம் வந்தாலும் எதுவும் சொல்லாமல் இருக்க, சற்று நேரத்தில் யாமினியும் அம்மாவிடம் அனுமதி பெற்றுக்கொண்டு வந்து மெல்ல குளத்தினுள் இறங்கினாள்.

அவர்கள் இருவருக்கும் நீச்சல் சுத்தமாகத் தெரிந்திருக்காது. ஆகையால், அவர்களுக்கு நீச்சல் பழக்கி விடும் சாக்கில் யாமினியை கொஞ்சம் அங்கே இங்கே தொட முடியும் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் இருவரும் நன்றாகவே நீத்திக் கொண்டிருந்தனர்.

எனக்கு ஆச்சரியம் மேலிட கீர்த்தனாவிடம் கேட்டேன்.

“நீ எங்கடி நீச்சல் கத்துகிட்ட?”

“அதுவா? நா அப்பப்ப வீக்கென்ட்ல யாமினி கூட அவங்க ஊருக்கு போவேன். அங்க அவங்க தாத்தா வீட்ல பெரிய ஸ்விம்மிங் பூல் இருக்கு. அதுல தான் கத்துக்கிட்டேன்.”

“ஓஹ் குட் குட்.”

நால்வரும் மிகவும் சந்தோசமாக நன்றாகவே நீந்திக் குளித்தோம். இடையிடையே நான் ஓரக்கண்களால் யாமினியை அளந்து கொண்டே தான் இருந்தேன்.

இன்னும் நிறைய தூரங்கள் செல்லவேண்டி இருப்பதனால், அம்மாவின் நச்சரிப்பில் சீக்கிரமே குளித்து முடித்துவிட்டு வெளியேறினோம். யாமினியினதும் கீர்த்தனாவினதும் முழு உடம்பும் அப்பட்டமாக வெளியே தெரியும் அளவுக்கு அவர்களது ஆடைகள் அவர்களது உடம்போடு ஒட்டி இருக்க, நான் யாமினியின் பின் பக்கம் நோக்கினேன். அவள் உள்ளே போட்டிருந்த ப்ரா, இன்னர் வெஸ்ட், பேன்ட்டி என எல்லாமே அவளது சுடிதாருக்கு மேலாக கருப்பு நிறத்தில் எனது கண்களுக்கு காட்சியளித்தன. அவளது அரைவட்ட வடிவான இரண்டு பின்னழகுப் புட்டங்களின் சதைகளும் அவள் நடக்கும் அதிர்வுகளுக்கேற்ப ஆடி அசைந்துகொண்டு அழகாக அவளுடன் சென்று கொண்டிருந்தன.

ஆடைகளை மாற்றுவதற்காக அம்மா அவர்கள் இருவரையும் அந்த மரத்திற்கு பின் புறமாக ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் செல்ல நானும் வருணும் ஷார்ட்ஸை கழட்டி நன்றாகப் பிழிந்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுவிட்டு வேறு உடைகள் மாற்றிக் கொண்டு காரில் அமர்ந்திருந்தோம்.

யாமினி ஆடை மாற்றும் காட்சி எனது கற்பனையில் ஓடிக்கொண்டிருந்தது. கண்களை மூடி அதனை ரசித்துக் கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில்,
“கார்த்திக் ணா! அங்க கொஞ்சம் பாருங்க.” என்றான் வருண்.

வெள்ளை நிறச் சுடிதாரும் வெள்ளை நிறப் பாண்டும் வெள்ளை நிறத் துப்பட்டாவும் என ஒரே மாதிரியாக அணிந்து கொண்டு யாமினியும் கீர்த்தனாவும் தேவதைகள் போல வந்து கொண்டிருந்தனர்.

“ஒரே மாதிரி டிரஸ் எப்ப எடுத்தாங்க?” என்று கேட்டேன்.

“எங்க அக்கா பிறந்த நாளைக்கு அப்பா கிப்ட் பண்ணது. அதே மாதிரி டிரஸ் கீர்த்தனா அக்காக்கும் வேணும்னு எங்க அக்கா கேட்டு அப்பா எடுத்துக் குடுத்தாரு.” என்றான்.

அவர்கள் காரில் ஏறியதும், பின்னால் திரும்பி கீர்த்தனாவைப் பார்த்து,
“கீர்த்து! யு லுக் லைக் என் ஏஞ்சல்.” என்றேன்.

“ஓஹ். தேங்க்ஸ் ணா. அப்போ யாமினி?”

அதனை என் வாயால் வேறு சொல்ல வேண்டுமா? இருந்தாலும் அது பற்றி பதில் சொல்லாமல் கொஞ்சம் சமாளித்தேன்.

‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. எனக்கு நீ தான் ஏஞ்சல் மாதிரி தெரியுற. ஒரு வேள வருணுக்கு அவங்க அக்கா ஏஞ்சல் மாதிரி தெரியலாம்” என்றேன்.

யாமினி என்னை முறைப்பது எனது பக்கப் பார்வைக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனாலும், அவளை நேருக்கு நேர் பார்க்காமல் அப்படியே முன்னால் திரும்பி காரை ஸ்டார் செய்தேன்.

“ஷீ இஸ் நாட் அன் ஏஞ்சல். ஷீ இஸ் அ டெவில்.” என்றான் வருண்.

“ஹாஹா. எதுக்கு அப்டி சொல்ற?” என்று கேட்க, கீர்த்தனா முந்திக் கொண்டாள்.

“வருண் ஏதாச்சும் தப்பு பண்ணா யாமினி அங்கிள் கிட்ட சொல்லி குடுத்திருவா. அங்கிள் செம்ம சாத்து சாத்துவாரு. அதனால தான் அப்டி”
என்று கூறி சிரித்தாள்.

“ஓஹோ! ரியல்லி?” என்று வருணைப் பார்த்துக் கேட்க,

“ஆமாண்ணா. இது ஒரு டெவில்.” என்றான்.

“அந்த வகையில பாக்க போனா என்னோட சிஸ்டர் ஏஞ்சல் ப்ரோ மாக்ஸ்னு தான் சொல்லணும். சின்ன வயசுல நா என்ன தப்பு பண்ணாலும் அப்பா அம்மாகிட்ட சொல்லாம என்ன காப்பாத்துவா. அப்பாகிட்ட அம்மாகிட்ட எனக்காக அப்பப்ப அடியும் வாங்கி இருக்கா. எப்பவுமே எனக்கு சப்போர்ட்டா இருப்பா. இவள மாதிரி ஒரு தங்கச்சி கிடைக்க நா குடுத்து வச்சிருக்கணும்” என்றவாறு அம்மாவை நோக்கி,
“இல்லம்மா?” என்றேன்.

சட்டென எனது கன்னங்களைப் பிடித்து இழுத்து, கன்னத்தில் ஒரு முத்தமிட்டு,
“லவ் யு ண்ணா” என்றாள் கீர்த்தனா. அதற்கிடையில், அவளது கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் கன்னங்கள் வழியாக உருண்டோட,

நான் அவளைப் பார்த்து,
“லூஸு! எதுக்கு அழுற? கண்ண தொடச்சிக்கோ.” என்றேன்.

“நல்ல அண்ணனும் நல்ல தங்கச்சியும் தான்.” என்றவாறு அவளை அணைத்தார் அம்மா.

யாமினியும் வருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நா ஒண்டும் இவன வேணும்னே அப்பாகிட்ட போட்டுக் குடுக்க மாட்டேன். அவன் செய்ற வேலைகள் அப்டியிருக்கும். அதனால தான் போட்டுக் குடுப்பேன்.” என்றாள் யாமினி.

“ஓஹ். சரி சரி. லீவ் இட். லீவ் இட்.” என்றவாறு காரை எடுத்தேன்.

அன்றைய தினம் கொடைக்கானல் சென்று சேர மாலை 7 மணி ஆகி விட்டிருந்தது. ஒரு ஹோட்டலில் இரண்டு ரூம்கள் புக் செய்தேன். ஒரு ரூமில் நானும் வருணும் அடுத்த ரூமில் அம்மாவும் கீர்த்தனாவும் யாமினியும் தங்கிக்கொள்ள முடிவு செய்தோம்.

கொடைக்கானலின் குளிர்மை உடம்புக்கு வேறு விதமான ஒரு உணர்ச்சியினைக் கொடுக்க பீர் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

அம்மாவிடம் இரவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிறேன் எனக் கூறி விட்டு காரை எடுத்துக்கொண்டு தனியாகப் புறப்பட்டேன்.

சாப்பாடும் பீரும் சிகரட்டும் வாங்கிக்கொண்டு ரூமுக்கு வந்து ரூமை திறந்தால், ரூம் லாக் ஆக இருந்தது. வருண் அங்கே இல்லை. நான் பீரை மீண்டும் காரில் கொண்டு சென்று வைத்துவிட்டு, அடுத்த ரூமுக்குச் சென்று பார்த்தால் கீர்த்தனாவும் யாமினியும் கூட அங்கே இல்லை. அம்மா மாத்திரம் குளிர் பொறுக்க முடியாமல் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்.

அம்மாவிடம் சாப்பாட்டினைக் கொடுத்து விட்டு,
“எல்லாரும் எங்க போய்ட்டாங்கம்மா?” என்று கேட்டேன்.

“சும்மா இந்த ஹோட்டல சுத்திப் பாத்துட்டு வரேன்னு போறாங்க.” என்றார்.

நானும் சரியென கீழே இறங்கி வந்து கீர்த்தனாவுக்கு கால் செய்தேன். அவள் போனை எடுக்கவில்லை. வருணுக்கு கால் செய்தேன். அவனும் எடுக்கவில்லை. யாமினிக்கு கால் செய்ய மனம் வரவில்லை. ஆகையால், அவர்கள் வருகின்ற நேரம் வரட்டும் என நினைத்துக் கொண்டு, காரில் வைத்து பீரினைக் குடிக்கலாம் என முடிவு செய்து பீரினை எடுத்து அதனை ஓபன் செய்து வாயில் வைத்துக் கொண்டு அண்ணாந்தேன்.

அப்பொழுது அங்கே விசித்திரமான ஒரு சம்பவம் நடந்தது.

தொடரும்….

Mail & Gchat:-
[email protected]

6656600cookie-checkயட்சி 7